Thursday, October 13, 2011

பகவான் தோற்றத்தை பற்றி கீதையில்:


ஸ்ரீ கிருஷ்ணர் மாயை சக்தியை தன் வசத்தில் வைத்துக் கொண்டு ஓர் உடலைப் பெற்றவர் போலதோற்றத்தில் அவதரித்தார்
 அதாவது ஈச்வரனோ மாயையைத் தன் வசத்தில் வைத்திருப்பவர்
ஜீவனோ மாயையின் வசத்தில் உள்ளவன் இதுவே ஜீவனை ஈச்வரனிலிருந்து வேறுபடுத்துகிறது
ஞானிகளின் விஷயத்தில் அவர்கள் தன் உண்மை ஸ்வருபத்தை அறிந்தாலும், கர்மபலன்களின் விளைவாக பிறவியைப் பெற்றிருப்பதால் ஈச்வரனிலிருந்து வேறுபடுகிறார்கள்
 ஸத் என்பது எப்பொழுதும் தன் இருப்பை இழப்பதில்லை இருப்பின் மூன்றுவித நிலைகள்
 பாரமார்திக ஸத்யம்- முற்றிலும் உண்மை-ஸத்யம் ஞானம் அனந்தம் என்னும் தன்மை கொண்டப்ரஹ்மம் எந்தவித குணங்களும் அற்றது
சுயமான இருப்பு கொண்டது
 வியவஹாரிய் ஸத்யம் -அன்றாடமபலவியவஹாரங்களசெய்கிறோம், பல் பொருட்களை அனுபவிக்கிறோம் இவை வியவஹாரிய ஸத்யம் உடையவை
 பராதிபாஸிக ஸத்யம்  நாம் கனவிலும் கற்பனையிலும் காண்பவை. பார்ப்பதால் மட்டுமே ஓர் இருப்பு நிலையைப் பெறுவது

உலகம்-ஈச்வர ஸ்ருஷ்டிஅவருடைய நியதிகளுடன்,ஓர் ஒழுங்குடன் நடக்கிறது-வ்யாவஹாரிக ஸத்தியம்
நாமாகவே ஓர் உலகை ஸ்ருஷ்டி செய்து கொள்கிறோம் தவறுகளும், குழப்பங்களும் கொண்டது-ஜீவ ஸ்ருஷ்டிப்ராதிபாஸிக ஸத்தியம்

வ்யாவஹாரிக ஸத்தியமும் ப்ராதிபாஸிக ஸத்தியமும்
மாறிக்கொண்டே இருப்பவை அனுபவிப்பவை
இவை இரண்டிற்கும் அடிப்படையாக மாறுதலற்ற ஓர் உண்மை
உள்ளது அது ஸச்சிதானந்த ஆத்மாவாகும்
ஸத்திய வஸ்து நிலையான இருப்பைக் கொண்டது ஆனால் நாம் காண்பவற்றுக்கு இருப்பு அந்தஸ்தை கொடுக்கும் பொருட்டு
இருப்பு மூன்றுவிதங்கள் என்று கூறப்படுகிறது

கிருஷ்ணாவதாரம் எந்தவகை ஸத்யத்தைச் சேர்ந்தது ?

பிறப்பும் மாறுதலும் அற்றவன் என்னும்போது பாரமார்திக ஸத்யம் ஆனால் அர்ஜூனனின் எதிரில் காணப்படும் கிருஷ்ணர்என்ற உடல் பாரமார்திக ஸத்யம் ஆகாது
 கிருஷ்ணர் என்ற உடல் கர்மபந்ததினால் ஏற்படாததால் வியவஹாரிய ஸத்யமும் ஆகாது
 மாயையை தன் வசத்தால் தோன்றியதாக கூறுவதால்
ப்ராதிபாஸிக ஸத்யமா? காணப்படுவது ஆனைத்தும் காண்கிறார்கள் என்றாலும் உண்மை என்று கூறிவிட முடியாது
உ-ம் நீல நிற ஆகாசம், வளைந்த வானம்
கிருஷ்ணர் பிறந்தது போன்று ஓர் உடலுடன் காணப்பட்டார்-உடலை உண்மை என்று கூறமுடியுமா?

கிருஷ்ணர் உடல் பாரமார்திக ஸத்யமும் இல்லை, வியவஹாரிய் ஸத்யமும் இல்லை, ப்ராதிபாஸிக ஸத்தியம் என்றே கூறவேண்டும்

இறைவன் ஏன் அவதரிக்கிறார் ?
நல்லோர்களும் தேவர்களும் கூட்டாக பிரார்த்திப்பதால் (புராணங்கள் கூறுகின்றன) அஸுரர்கள் தவவலிமையால் குறிப்பிட்ட வடிவத்தில் தங்களை கொன்றாலொழிய மரணம் அடையகூடாது என்று பெற்றவரத்தால் குறிப்பிட்ட வடிவத்தில் குறிப்பிட்ட பணிக்காக தோன்றுவது அவதாரம் ஆகிறது
 நரஸிம்ஹாவதாரம் வாமனாவதாரம் போன்று ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் செய்வதற்காக அமையலாம்
ராமர் எந்தவிதத் துன்பத்தின் நடுவிலும் தர்மத்தை விடாது
எப்படி வாழ்வது என்று காட்டினார்
கிருஷ்ணர் ஆனந்தமும் ஞானமும் ஒருங்கே வடிவாக இருந்தார்
 ஸம்பவாமி என்பதற்கு உடல் எடுத்தவர் போன்றும் , பிறந்தவர் போன்றும் தோன்றுகிறார்
 வேதத்தில் தேவர்களை பற்றி கூறி இருந்தாலும்
அவதாரத்தை பற்றி கூறவில்லை
ராமர்,கிருஷ்ணர் பற்றி புராணத்தில்தான் கூறி உள்ளது

மகாபாரதம் ஓர் இதிஹாஸம் இப்படிதான் இருந்தது
எனறு பொருள்படும்.மகாபாரதம் சரித்திரப் பின்னணியை கொண்டிருந்தாலும்ராமாயணத்தைப் போல் ஒரு காவியமும் ஆகும்

காவியத்தைப் படைப்பவர்கள் அவர்கள் விரும்பும் ரஸங்கள்
சொல்ல விரும்பும் செய்திகள் இவற்றுக்காக கதையுடன் கற்பனையையும் சேர்ப்பதற்கு சுதந்திரம் உண்டு
உ-ம் ராவணனைப் பத்துத் தலைகள், ஹநுமார் குரங்காக இருந்தாலும் உரையாடுபவராகவும்

 எங்கு செயலை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளதோ அங்கு
சுதந்திரத்தை துஷ்ப்ரயோகம் செய்யும் வாய்ப்பு உள்ளது
தர்மத்திற்குக் குந்தகம் விளையும் போது அதர்மம் ஓங்கும் போது பல மனிதர்களினபிரார்த்தனையின் பலனாக
(ஸமஷ்டி கர்ம பலனாக) பகவான் அவதரிக்கிறார்

 ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் தோன்றுவதற்கான நோக்கம்,
தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்று உறுதியாக உள்ள ஸாதுக்களைக் காப்பதன் பொருட்டும்
அதற்காக-தர்மத்தைப் பின்பற்றாதிருப்பவர்களை தண்டிப்பதற்கும்
தர்மத்தை நிலைநாட்டுவதற்கும்