மஹிஷியை வதம் செய்ய மணிகண்டன் பம்பையின் தீரத்தையடைந்தபோது ஐயனின் மெய்க்காப்பாளராகக் குசன்
தோனறினார். மஹிஷிஎன்பவர் லீலா எனும் ஓர் உத்தமப் பெண்ணாயிருந்தாள். சாபம் காரணமாக அரக்கர் குலத்தில் தோன்றினாள்.
மஹிஷி-மாயாசக்தி பெற்றவள் அவள் பெற்றவரமாவது
சிவ-விஷ்ணு சக்தி சேர்ந்தால்தான் அவளை வெல்ல முடியும்.
ஐயப்பதேவன் அவளை வெல்ல 18 நாட்கள் போராட வேண்டியிருந்தது.
குசன் ஐயனின் உடலில் ஒரு சிறு காயங்கூட ஏற்படாமல் பாதுகாத்ததுமின்றி மஹிஷியின் பிசாசுப்படையின் பெரும் பகுதியைச் சின்னாபின்னமாக்கினார்.
மஹிஷியினை அழிக்க உதவியது மோக்ஷத்தை தரவல்லதாயினும், பிசாசுகளைக் கொன்றதால் அப்பாவத்தைத் தீர்க்க மீண்டும் ஒருமுறை தோன்றிவிடு என்ற கட்டளையை ஏற்று, சுமார் 350 வருடங்களுக்கு முன் சங்கரன்கோவிலிலுள்ள ஆதிவிநாயகர் தெருவில் வாழ்ந்த குடும்பத்தில் கருப்பன் அவதரித்தார்.
இளம் வயதிலேயே கருப்பன் (குழந்தை) முற்றும் துறந்த ஞானிபோல் வாழ்ந்தார். பிள்ளைப் பிராயத்தைக் கடந்தவுட்ன்
கருப்பன் ஆன்மீகத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தினார்.
கருப்பன் வேதம் ஓதியதால் அவர் குடும்பம்
ஓதுவார் குடும்பம் ஆனது.
கருப்பன் பருவம் அடைவதற்கு முன்னரே பற்றற்ற முழுத்துறவியாக மாறினார்.
துறவிகள் இருவகைப்படுவார்கள்.
ஒருவகை-- மெய்ப்பொருளைக் காணல்-
மற்றொரு வகை-- மடங்கள், மருத்துவ நிலையங்கள், கல்விச்சாலைகள் போன்றவைகளை நிறுவி தொண்டாற்றுதல்.
கருப்பன் முதல் வகையை சேர்ந்தவர்.
கருப்பன் பல அனுபவங்களைப் பெற்று இறுதியில் பைம்பொழில்-மேக்கரை வந்தார். வந்ததை இறைவனின் சித்தம் என எண்ணி
அமைதிபெற்றார்.அதைத் தொடர்ந்து அச்சன் கோவிலுக்கு வந்தார்.
”மனிதன் தான் விரும்பும் பொருள்கள் அனைத்தையும் விட
உயர்ந்தவன்”
கருப்பன், கோவில் நைவேத்தியத்தை உண்டு இன்பமாக வாழ்ந்து வந்தார்.
வாரத்தில் ஒருநாள் கருப்பன் வாளேந்தி கல்லாற்றின் கரைநோக்கி நடப்பதுண்டு. அவருடன் சங்கிலி பூதத்தார்
சேப்பாறைமுண்டன்,சப்பாணி,காளைமாடன் போன்றவர்களும்
உடன் செல்வதுண்டு. இவர்களுடன் இரண்டு புள்ளிப்புலிகள்.
சூதும் வாதும் நிறைந்த மனிதர்களைவிட வன விலங்குகளின்
நேர்மையில் கருப்பனுக்கு நம்பிக்கை அதிகம்
தீ பொருளை பக்குவப்படுத்துகிறது. தூய்மைப் படுத்துகிறது அதைப் போன்று இறைவன் தன்னைச் சரணடைந்தவரை பக்குவப்படுததித் தூய்மையாக்குகின்றார்.
ஒரு நாள் இரவு அர்ச்சப்போற்றியின் (திருமேனி) மேல் அன்னை
எழுந்தருளி,ஐயனின் கட்டளைகள் சிலவற்றைக் கூறினாள்.
கருப்பனும் அதற்கு உடன்பட்டார். உலகின் இன்ப துன்பங்களைச்
சுட்டெரித்து வாழும் அத்தவயோகி அன்னையை நோக்கி
“ நான் முற்றும் துறந்தவன். என்னால எங்கும் எப்படியும் வாழமுடியும். நீங்கள் இங்கிருந்து இவ்வுலகைக் காப்பாற்ற வேண்டும்” எனக்கூறினார்.
மறு நாள் பகல் முழுவதும் கருப்பன் முகத்தில் என்றுமில்லாத
ஒரு தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருந்தது.
ஞானிகள் எல்லைகளுக்கு அப்பாறபட்டவர்கள்.
கண்ணன் வேடனைக் காரணமாக்கி, இவ்வுலகிலிருந்து, பிரிவை ஏற்படுத்திக் கொண்டார்.
ராமன் சரயூ நதியைத் தேர்ந்தெடுத்துப் பிரிந்தார்.
கருப்பன், திருடர்களின் கோபாவேசம் என்னும் செயலை வைத்து
ஜோதியில் கலந்த சுடர்மணி ஆனார்