Tuesday, December 14, 2010

கருப்பஸ்வாமியை பற்றிய சில செய்திகள்

மஹிஷியை வதம் செய்ய மணிகண்டன் பம்பையின் தீரத்தையடைந்தபோது ஐயனின் மெய்க்காப்பாளராகக் குசன்
தோனறினார். மஹிஷிஎன்பவர் லீலா எனும் ஓர் உத்தமப் பெண்ணாயிருந்தாள். சாபம் காரணமாக அரக்கர் குலத்தில் தோன்றினாள்.
மஹிஷி-மாயாசக்தி பெற்றவள் அவள் பெற்றவரமாவது
சிவ-விஷ்ணு சக்தி சேர்ந்தால்தான் அவளை வெல்ல முடியும்.
ஐயப்பதேவன் அவளை வெல்ல 18 நாட்கள் போராட வேண்டியிருந்தது.

குசன் ஐயனின் உடலில் ஒரு சிறு காயங்கூட ஏற்படாமல் பாதுகாத்ததுமின்றி மஹிஷியின் பிசாசுப்படையின் பெரும் பகுதியைச் சின்னாபின்னமாக்கினார்.

மஹிஷியினை அழிக்க உதவியது மோக்ஷத்தை தரவல்லதாயினும், பிசாசுகளைக் கொன்றதால் அப்பாவத்தைத் தீர்க்க மீண்டும் ஒருமுறை தோன்றிவிடு என்ற கட்டளையை ஏற்று, சுமார் 350 வருடங்களுக்கு முன் சங்கரன்கோவிலிலுள்ள ஆதிவிநாயகர் தெருவில் வாழ்ந்த குடும்பத்தில் கருப்பன் அவதரித்தார்.

இளம் வயதிலேயே கருப்பன் (குழந்தை) முற்றும் துறந்த ஞானிபோல் வாழ்ந்தார். பிள்ளைப் பிராயத்தைக் கடந்தவுட்ன்
கருப்பன் ஆன்மீகத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தினார்.
கருப்பன் வேதம் ஓதியதால் அவர் குடும்பம்
ஓதுவார் குடும்பம் ஆனது.
கருப்பன் பருவம் அடைவதற்கு முன்னரே பற்றற்ற முழுத்துறவியாக மாறினார்.

துறவிகள் இருவகைப்படுவார்கள்.
ஒருவகை-- மெய்ப்பொருளைக் காணல்-
மற்றொரு வகை-- மடங்கள், மருத்துவ நிலையங்கள், கல்விச்சாலைகள் போன்றவைகளை நிறுவி தொண்டாற்றுதல்.
கருப்பன் முதல் வகையை சேர்ந்தவர்.
கருப்பன் பல அனுபவங்களைப் பெற்று இறுதியில் பைம்பொழில்-மேக்கரை வந்தார். வந்ததை இறைவனின் சித்தம் என எண்ணி
அமைதிபெற்றார்.அதைத் தொடர்ந்து அச்சன் கோவிலுக்கு வந்தார்.
மனிதன் தான் விரும்பும் பொருள்கள் அனைத்தையும் விட      
 உயர்ந்தவன்
கருப்பன்,  கோவில் நைவேத்தியத்தை உண்டு இன்பமாக வாழ்ந்து வந்தார்.
வாரத்தில் ஒருநாள் கருப்பன் வாளேந்தி கல்லாற்றின் கரைநோக்கி நடப்பதுண்டு. அவருடன் சங்கிலி பூதத்தார்
சேப்பாறைமுண்டன்,சப்பாணி,காளைமாடன் போன்றவர்களும்
உடன் செல்வதுண்டு. இவர்களுடன் இரண்டு புள்ளிப்புலிகள்.
சூதும் வாதும் நிறைந்த மனிதர்களைவிட வன விலங்குகளின்
நேர்மையில் கருப்பனுக்கு நம்பிக்கை அதிகம்


தீ பொருளை பக்குவப்படுத்துகிறது. தூய்மைப் படுத்துகிறது அதைப் போன்று இறைவன் தன்னைச் சரணடைந்தவரை பக்குவப்படுததித் தூய்மையாக்குகின்றார்.

ஒரு நாள் இரவு அர்ச்சப்போற்றியின் (திருமேனி) மேல் அன்னை
எழுந்தருளி,ஐயனின் கட்டளைகள் சிலவற்றைக் கூறினாள்.
கருப்பனும் அதற்கு உடன்பட்டார். உலகின் இன்ப துன்பங்களைச்
சுட்டெரித்து வாழும் அத்தவயோகி அன்னையை நோக்கி
“ நான் முற்றும் துறந்தவன். என்னால எங்கும் எப்படியும் வாழமுடியும். நீங்கள் இங்கிருந்து இவ்வுலகைக் காப்பாற்ற வேண்டும்எனக்கூறினார்.
மறு நாள் பகல் முழுவதும் கருப்பன் முகத்தில் என்றுமில்லாத
ஒரு தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருந்தது.

ஞானிகள் எல்லைகளுக்கு அப்பாறபட்டவர்கள்.

கண்ணன் வேடனைக் காரணமாக்கி, இவ்வுலகிலிருந்து, பிரிவை ஏற்படுத்திக் கொண்டார்.
ராமன் சரயூ நதியைத் தேர்ந்தெடுத்துப் பிரிந்தார்.
கருப்பன், திருடர்களின் கோபாவேசம் என்னும் செயலை வைத்து
ஜோதியில் கலந்த சுடர்மணி ஆனார்





Saturday, December 11, 2010

வரலாற்றில் அச்சன்கோவில்

கேரளத்தை இரட்சிப்பதற்காக மேற்கு தொடர்ச்சி ம்லைகளில்
பரசுராமரால் உருவாக்கப்பட்டவை ஐந்து சாஸ்தா கோவில்கள்.
எத்தனையோ யுகங்கட்குமுன்பு பரசுராமரால் பிரதிஷ்டிக்கப் பெற்ற அதே விக்கிரகத்தை அச்சன் கோவிலில்இன்றும் காணலாம்.
அச்சன் கோவில் தர்ம சாஸ்தா விக்கிரகம் மிகுந்த ஒளஷத சக்தி வாய்ந்தது. அச்சன் கோவில் தீர்த்தமும், கைச்சந்தனமும் பாம்புக்கடி,பூச்சிக்கடி விஷத்தை இன்றும் இறக்கிவிடுகிறது,

அச்சன்கோவில் பிரதிஷ்டை கிரஹஸ்தாசிரம வழியைப் பின்பற்றியதாகும் இங்கு தர்ம சாஸ்தா பூர்ணபுஷ்கலா சமேதராக ராஜகம்பீரத்தோடு வீற்றிருப்பதைக் காணலாம்.

பூர்ண - எல்லாச் செல்வங்களின் இருப்பிடமென்றும் எவ்வளவு கொடுத்தாலும் குறையாத நிறைகுடமென்றும் பொருளாகும்.

புஷ்கலா என்றால் மீண்டும் மீண்டும் வாரிவழங்கத் தயாராக நிற்கும் நிலை

கார்த்திகை 30க்குப்பின் மார்கழியில் கொடியேற்றி உற்சவம் அச்சன் கோவிலில் நடைபெறுகிறது
ஸ்ரீபூதபலி,உற்சவபலி,சீவேலி போன்றவை நடைபெறும். தினந்தோறும் ரதவீதியில் மணிகண்ட முத்தய்யனைச் சுமந்தப்டி தேரோடும்.

9ஆம் நாள் அலங்கரித்த தேரில் சுவாமியை இருத்தி பூஜை நடந்த பின் பவனிவருவார். தேர் அம்மன் காவினையடைந்து கருப்பன்ஸ்வாமி துள்ளல் நடைபெறும். அதன் பின் க்ஷேத்திர-பிரதிட்சணம் செய்த பிறகு, ம்ணிகண்டனை பதினெட்டாம்படியில் இறக்கி நிறுத்துவார்கள்.
 ஐயப்பனும் கருப்பனும் இப்பொழுது எதிரெதிரே சந்திப்பார்கள். கருப்பன் கோவில் பூசாரி சலங்கைஅணிந்து,கச்சைகட்டி அரிவாளும் வேலும் தாங்கியபடி விபூதித்தட்டுடன் நடந்துவந்து பதினெட்டாம் படியில் வாளையும் விபூதித்தட்டையும் வைத்து வணங்கிபின் ஸ்வாமியுடன் அம்மன் காவிற்குச் சென்று அடிமுடிகுலுங்க அருள்வாக்குகூறி பக்த்கோடிகட்கு விபூதிப்பிரசாதமளித்தபின் தாழமண்மடத்தையடைகிறார். தந்திரி விபூதி பூசி க்ருப்பனை தன் நிலைக்கு கொண்டுவருவார். 3-ம் திருவிழா முதல் 9-ம் திருவிழாவரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்

க்ருப்பனும் ஒரு மலைப் பணடாரமும் சேர்ந்து காந்தமலையிருந்து கொண்டுவந்த -ஜோதிவாளை அச்சன் கோவில் அரசன் பாதங்களில் சமர்ப்பிப்பார்கள்
பின் அந்த தங்கவாளை யானை மீதேற்றி கருப்பனைக் கொண்டு விட்ட பின்,கருப்பசாமி கோவில் சங்கிலி பூதத்தானுக்கு போற்றி பூஜை செய்வார். அதன் பின் அந்த தங்கவாளினை கொண்டு சென்று அச்சன் கோவில் அரசன்--தர்ம் சாஸ்தா திருப்பாதகமலத்தில் வைத்து வணங்குவர்
ஒன்பதாம் நாள் தேர் வீதி வலம் வந்தபின் கருப்பன் கோவிலுக்கு எழுந்தருளும் போது பகவான் பள்ளிவேட்டை
நடத்துவார்.
பத்தாம் நாள் ஆறாட்டிற்குப் பின் தந்திரி கொடியிறக்குவார்.
மார்கழி 11ம் தேதி தேவியின் உருவங்களையும் களம் எழுதி வைப்பார்கள்  அதையடுத்துவரும் செவ்வாயன்று குருதியும்
வெள்ளியன்று கருப்பன் ஊட்டும் நடைபெறுவதோடு திருவிழா முடிவடையும்.




Sunday, December 5, 2010

அறிவைப் பற்றிய என் எண்ணங்கள்

விஷயங்களை தெரிந்தவை,தெரியாதவை என்று இரண்டாகப் பிரிக்கலாம்.தெரிந்தவைகளை வைத்து தெரியாதவைகளைப் புரிந்து கொள்ளலாம்
தெரிவது என்பது நம் பார்வையில் படுவது.
புரிவது என்பது அறிவால் அறிவது.

எடுத்துக்காட்டாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்
கோவிலுக்குச் சென்றால் அவர் உருவத்தை கண்ணால் பார்க்கலாம்.
அல்லது நம் வீடுகளில் படத்தில் காணலாம்.
பகவான் எப்படிப்பட்டவர்? அவர் கூறும் தத்துவம் என்ன என்பது,
  1. பக்தி செலுத்துவதனால் அல்லது
  2. கீதையைப் படித்தால் அல்லது
  3. படித்துப் புரிந்தவர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றினால் புரியும்.
தெரிவதற்கும் புரிவதற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

நம் பார்வையில் படுவது, தெரிவது, சிந்தனையில் வருவது
இவை எல்லாம் வெளிச்சம் என்றால்
பார்வையில் படாதது, கண்ணுக்குத் தெரியாதது, சிந்தனையில் வராதது எல்லாம் இருட்டு.

மனிதப் பிறவியே இயல்பில்,அறியாமையுடன் தொடங்குகிறது

குழந்தை பசிக்கிறது என்பதை முதலில்அழுதுதான் வெளிப்படுத்தும். தன் தேவையை உணர்த்த அழுகையைத் தவிர
வேறெதுவும் தெரியாது.

குழந்தை வளர வளர அதன் புரிதல் அல்லது அறிதலும் வளர்கிறது.

தவறுகளை வேண்டும் என்றே யாரும் செய்வதில்லை. அறியாமையால் ஏற்படும் நிகழ்வுகள்தான். நாம் அறியாமையில் இருப்பதால், அறியப்பட வேண்டியது அறிவு ஆகிறது.

இந்த அறியாமையின் அளவு, காலத்துக்கு ஏற்ப அதிகம் ஆகிறது.

அசுரன் இரண்ய கசிபு-நானே கடவுள் எனறான்.
ஏற்க மறுத்தவர்களைச் சிறையில் அடைத்தான். கொடுமைப்படுத்தினான். தன்னைக் கடவுளாக ஏற்க மறுத்த மகனையே அழிக்க நினைத்தான்.
இது அறியாமையால் நடந்தது
இறைவன், நரசிம்மமாய் அவதரித்து, அநியாயங்களில் இருந்து மக்களையும் பிரகலாதனையும் காப்பாற்றினார்.
இரண்யகசிபுவையும் ரக்ஷித்தார்.


அடுத்து வந்த காலத்தில், இராவணன் சீதையை அபகரித்தான்.
கடவுள் ராமனாக அவதரித்தார்.
1.தந்தை சொல் தட்டாத மகனாக, மனிதனாக மக்களுக்கு   
 வாழ்ந்துகாட்டி,
2.இராவணனையும் ரக்ஷித்து,
3.தர்மத்தை நிலைநாட்டி
ராஜ்யத்தை ஆண்டார்.

கெளரவர்கள் 100 பேர்.
சூதாட்டம்,சூழ்ச்சி,பெண்ணை அவமானப்படுத்துதல், ஏமாற்றுதல், வார்த்தை தவறுதல் முதலிய அனைத்து அறியாமை  குணங்களும் நாடாளும் அரசனிடமே இருந்தன.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாதிக்கப்பட்ட பாண்டவர்கள் பக்கம் இருந்து அறிவுரை கூறி அர்ஜுனனைப் போரில் ஈடுபடுத்தி தர்மத்தை நிலை நாட்டினார்.

ஒனறே ஒன்று மட்டும்தான் பிரச்சனை எனற நிலையில் பகவானே வந்தார் (அசுரன் இரண்ய கசிபு, இராவணன்).
ஒன்று 100 ஆகும் போது பஞ்ச பூத அறிவான ஐவருடன் (பாண்டவர்கள்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார்


கலியுகத்தில் ?
உலக விஷயங்கள்அதிகம்.
நம்மில், நமக்குள், இருக்கும் அறியாமைகள் பலமடங்கு அதிகம்.


ஒரு கணக்கு- எப்படிச் செய்வதென தெரியவில்லை.
ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபின் அந்தக் கணக்கு புரிகிறது. இந்த புரிதலுக்கு துணை புரியும் ஆதார அறிவே கடவுள்.  அதாவது கடவுள், அறியும் அறிவாக மட்டுமே இருக்கிறார் அறிவே கடவுள்,


அறிவைத் தவிர இரண்டாவது விஷயம் இல்லை என்று நினைக்கிறேன்