கேரளத்தை இரட்சிப்பதற்காக மேற்கு தொடர்ச்சி ம்லைகளில்
பரசுராமரால் உருவாக்கப்பட்டவை ஐந்து சாஸ்தா கோவில்கள்.
எத்தனையோ யுகங்கட்குமுன்பு பரசுராமரால் பிரதிஷ்டிக்கப் பெற்ற அதே விக்கிரகத்தை அச்சன் கோவிலில்இன்றும் காணலாம்.
அச்சன் கோவில் தர்ம சாஸ்தா விக்கிரகம் மிகுந்த ஒளஷத சக்தி வாய்ந்தது. அச்சன் கோவில் தீர்த்தமும், கைச்சந்தனமும் பாம்புக்கடி,பூச்சிக்கடி விஷத்தை இன்றும் இறக்கிவிடுகிறது,
அச்சன்கோவில் பிரதிஷ்டை கிரஹஸ்தாசிரம வழியைப் பின்பற்றியதாகும் இங்கு தர்ம சாஸ்தா பூர்ணபுஷ்கலா சமேதராக ராஜகம்பீரத்தோடு வீற்றிருப்பதைக் காணலாம்.
பூர்ண - எல்லாச் செல்வங்களின் இருப்பிடமென்றும் எவ்வளவு கொடுத்தாலும் குறையாத நிறைகுடமென்றும் பொருளாகும்.
புஷ்கலா என்றால் மீண்டும் மீண்டும் வாரிவழங்கத் தயாராக நிற்கும் நிலை
கார்த்திகை 30க்குப்பின் மார்கழியில் கொடியேற்றி உற்சவம் அச்சன் கோவிலில் நடைபெறுகிறது
ஸ்ரீபூதபலி,உற்சவபலி,சீவேலி போன்றவை நடைபெறும். தினந்தோறும் ரதவீதியில் மணிகண்ட முத்தய்யனைச் சுமந்தப்டி தேரோடும்.
9ஆம் நாள் அலங்கரித்த தேரில் சுவாமியை இருத்தி பூஜை நடந்த பின் பவனிவருவார். தேர் அம்மன் காவினையடைந்து கருப்பன்ஸ்வாமி துள்ளல் நடைபெறும். அதன் பின் க்ஷேத்திர-பிரதிட்சணம் செய்த பிறகு, ம்ணிகண்டனை பதினெட்டாம்படியில் இறக்கி நிறுத்துவார்கள்.
ஐயப்பனும் கருப்பனும் இப்பொழுது எதிரெதிரே சந்திப்பார்கள். கருப்பன் கோவில் பூசாரி சலங்கைஅணிந்து,கச்சைகட்டி அரிவாளும் வேலும் தாங்கியபடி விபூதித்தட்டுடன் நடந்துவந்து பதினெட்டாம் படியில் வாளையும் விபூதித்தட்டையும் வைத்து வணங்கிபின் ஸ்வாமியுடன் அம்மன் காவிற்குச் சென்று அடிமுடிகுலுங்க அருள்வாக்குகூறி பக்த்கோடிகட்கு விபூதிப்பிரசாதமளித்தபின் தாழமண்மடத்தையடைகிறார். தந்திரி விபூதி பூசி க்ருப்பனை தன் நிலைக்கு கொண்டுவருவார். 3-ம் திருவிழா முதல் 9-ம் திருவிழாவரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்
க்ருப்பனும் ஒரு மலைப் பணடாரமும் சேர்ந்து காந்தமலையிருந்து கொண்டுவந்த -ஜோதிவாளை அச்சன் கோவில் அரசன் பாதங்களில் சமர்ப்பிப்பார்கள்
பின் அந்த தங்கவாளை யானை மீதேற்றி கருப்பனைக் கொண்டு விட்ட பின்,கருப்பசாமி கோவில் சங்கிலி பூதத்தானுக்கு போற்றி பூஜை செய்வார். அதன் பின் அந்த தங்கவாளினை கொண்டு சென்று அச்சன் கோவில் அரசன்--தர்ம் சாஸ்தா திருப்பாதகமலத்தில் வைத்து வணங்குவர்
ஒன்பதாம் நாள் தேர் வீதி வலம் வந்தபின் கருப்பன் கோவிலுக்கு எழுந்தருளும் போது பகவான் பள்ளிவேட்டை
நடத்துவார்.
பத்தாம் நாள் ஆறாட்டிற்குப் பின் தந்திரி கொடியிறக்குவார்.
மார்கழி 11ம் தேதி தேவியின் உருவங்களையும் களம் எழுதி வைப்பார்கள் அதையடுத்துவரும் செவ்வாயன்று குருதியும்
வெள்ளியன்று கருப்பன் ஊட்டும் நடைபெறுவதோடு திருவிழா முடிவடையும்.
No comments:
Post a Comment