Saturday, January 29, 2011

கர்மத்தின் இலக்கணம் என்ன?/யஜ்ஞம் என்றால் என்ன ?


கர்மம் வெவ்வேறு வகைப்படும் ;
அதனால் அதன் இலக்கணமும் வேறுபடும்.

நாம் இச்சித்துச்செய்யும் செயல்களும் கர்மம்தான்
கண்கொட்டல் போன்று தானாக இயங்கும் செயல்களும் கர்மம்தான்.ஆகையால் பொதுவாக அசைவு அல்லது சலனம்தான்
கர்மம் என்று இலக்கணம் கூறலாம்
உடல் முழுவதும் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது-
மூச்சு விடுதல்,சிந்திப்பது,சாப்பிடுவது எல்லாமே செயல்தான்
உயிர் வாழும் பிராணிகள் செயலில் ஈடுபடாத நேரமே இல்லை
தூக்கத்தில் மூச்சு விடும்போது உறுப்புகள் வேலை செய்கின்றன.

கர்மத்தைச் செய்யத் தூண்டுவது எது?
அசைவுதான் செயல் என்றால்,இவ்வுடல் உயிர் வாழும்வரை
நம்மால் செய்லின்றி இருக்க முடியாது
இச்சித்துச் செய்யபடுவது செயல் என்றால் ஏதோ ஒன்றால் ஏவப்பட்டது போன்று நம் வசமின்றி ஏதாவது ஒரு செயலை நாம்
செய்துக்கொண்டே இருக்கிறோம்
இந்த ‘ஏதோ ஒன்றைபகவான் ‘பிரக்ருதி  என்று கூறுகிறார்

எல்லாப் படைப்புகளும், எல்லாக் கார்யங்களும் எந்தமூலப் பொருளிலிருந்து பிறக்கின்றனவோ அந்த உபாதாநகாரணம்-
பிரக்ருதி எனப்படும்
இறைவனின் சக்தியிலிருந்து உபாதாந காரணமான பிரக்ருதியிலிருந்துதான் நமது மனதும் பிறந்திருக்கிறது

பிரக்ருதி என்பது ஸத்வம்,ரஜஸ்,தமஸ் எனற 3 குணங்களால்
ஆனது இந்த 3 குணங்கள் நம் மனத்திலும் காணப்படுகின்றன.


அந்த:கரணம்-எனப்படும் மனதானது பிரக்ருதியின் மூன்று குணங்களையும் கொண்டது

1.தமஸிலிருந்து- செயலால் என்னகிடைக்கும்
2 ரஜஸிலிருந்து- பெருமைக்காக செய்ய விரும்பும்பொழுது
3.ஸத்வத்திலிருந்து - தேவைக்கு செய்யும்பொழுது

இந்த மூன்று வித இச்சைகளினால்தான் அனைத்து உயிரினங்களும் கர்மத்தில் ஈடுபடுகின்றன

யஜ்ஞம் என்றால் என்ன ?



யஜ்ஞார்தா த் கர்மணோSந்ய்த்ர லோகோSயம் கர்மப ந் ந: 

ர்தம் கர்ம கெளந்தேய முக்தஸங்: ஸமாசர 
                                    பகவத் கீதா 3-9

யஜ்ஞத்தின் பொருட்டான கர்மத்தினால் மட்டுமே இந்த மனித உலகம் கட்டுறுகிறது ; வேறு எந்த கர்மத்தினாலும் அல்ல.
அர்ஜுனா அதன் (யஜ்ஞத்தின்) பொருட்டு பற்றை
விட்டவனாய் கர்மத்தை நன்கு செய்வாயாக.

யஜ்ஞம்-(வைதிக சடங்கு) என்ற சொல் நம் சாஸ்த்ரத்தில் மிகவும் முக்கியமானது
யஜ்ஞத்தில்- கொடுப்பவர்,கொடுக்கப்படுவது , வாங்குபவர் என்ற
மூன்று கூறுகள் உள்ளன. இதை தவிர அர்ப்பணிக்கபடும் இடம்
என்ற நான்காவது கூறும் உள்ளது

விரிவாக பார்த்தால் கொடுத்தல் என்பது - யஜ்ஞத்தில் ஈச்வர அர்ப்பணம் ஆகும் ஸ்வாஹா நம சொல்லி அர்ப்பணிக்கிறோம்

ஆகையால் நாம் இச்சித்துச்செய்யும் செயல்களை ஈச்வரனுக்கு அர்ப்பணிக்கும் போது செயல்கள் யஜ்ஞ ம் ஆகிறது.
அப்படிப் பட்ட செயல்களால் இந்த மனித உலகம் கட்டுறுகிற்து இதன் மூலம் பகவான் கூறுவது யஜ்ஞத்தின் பொருட்டு பற்றை
விட்டவனாய் கர்மத்தை நன்கு செய்வாயாக




No comments:

Post a Comment